திருப்பதி தேவஸ்தான ஆகஸ்ட் மாத சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு – பக்தர்கள் கவனத்திற்கு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாத சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இன்று தேவஸ்தானத்தின் இணையதளத்தில் காலை வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு தரிசனம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் தரிசனத்திற்கு வழிபாட்டு தலங்களில் தடை அமலில் இருந்தது. இதனால் திருப்பதி கோவிலிலும் பொதுமக்களின் தரிசனத்திற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. முன்னதாக சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் அனைவரும் மீண்டும் நடப்பு ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாகம் அவகாசம் அளித்துள்ளது.
கேரளாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து? அரசுக்கு கோரிக்கை!
தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளில் 5,000 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், ஆகஸ்ட் மாத சிறப்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணி அளவில், தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in/index.html என்ற இணையத்தில் வெளியிடப்பட்டது. பக்தர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆகஸ்ட் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.