குழந்தைகளுக்கு கொரோனா வராமல் தடுக்கும் வழிமுறைகள் – சுகாதாரத்துறை விளக்கம்!
குழந்தைகளை கொரோனாவிலிருந்து காப்பது குறித்த வழிமுறைகளை புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க குழந்தைகளுக்கு மருத்துவ கட்டமைப்பு தயாராக உள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு கொரோனா:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் முதல் தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வைரஸ் உருமாறி அதிக வீரியத்துடன் இரண்டாம் கொரோனா அலையாக மக்களை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. நாடெங்கும் அனைத்து வயதினரும் உயிரிழந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் தனது குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இரண்டாம் அலை முடிவடையாத நிலையில் மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு எப்போது? முதல்வர் பதில்!!
மேலும் மூன்றாம் அலை வைரஸ் பரவல் குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் அரசு மருத்துவ கட்டமைப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் பெற்றோர், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் ஆகியவற்றை கடைப்பிடித்தால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும். மேலும் பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட குழந்தைகள் சோர்ந்து போகாமல், அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றையும், சத்துள்ள உணவையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். மருத்துவ ஆலோசனைப்படி அதற்கு தேவையான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மேலும் கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க குழந்தைகளுக்கு மருத்துவ கட்டமைப்பு தயாராக உள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.