நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன் அனைத்துக் கட்சி கூட்டம் – மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக வரும் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடர் :
கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவி வருகிறது நோய் பரவல் தடுக்க அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் மக்களுக்கு அறிவுறுத்துகிறது. கடந்த வருடம் நாடு முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழைக்காலக் கூட்டத்தொடர் இடையில் நிறுத்தப்பட்டது. அதே போல் இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரும் மார்ச் 8ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் முடித்துக் கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
தற்போது கொரோனா இரண்டாம் அலை வெகுவாக குறைந்து வருகிறது. ஊரடங்கிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் இந்தாண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னர் வரும் 18-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்தாண்டு மழை கால கூட்ட தொடரில் எம்.பி.க்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரானது ஜூலை 19 ஆம் தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் எனவும் மேலும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இரு அவைகளும் செயல்படும் எனவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 40 மசோதாக்கள், 5 அவசர சட்டங்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே போல் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 18 ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.