உத்தரகண்டில் ஜூலை 13 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் அமல்!
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூலை 13 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
உத்தரகண்ட் அரசு திங்களன்று மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. அதே போல கூடுதல் தளர்வுகளையும் அறிவித்துள்ளது. “ஊரடங்கு உத்தரவு ஜூலை 13 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று உத்தரகண்ட் அரசாங்க செய்தித் தொடர்பாளர் சுபோத் யூனியல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நீட், ஜேஇஇ தேர்வு தேதி 2021 இன்று வெளியீடு – தேசிய தேர்வு மையம் தகவல்!
மாநிலத்தில் உள்ள மால்கள் 50 சதவீத திறனில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும், வார இறுதி நாட்களில் சந்தைகள் தொடர்ந்து மூடப்படும் என்றும் அவர் கூறினார். கடந்த வாரம் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஐந்து நாட்களுக்கு பதிலாக வாரத்தில் ஆறு நாட்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் பயிற்சி மையங்களை 50 சதவீத பயனர்களுடன் திறக்க அனுமதி அளித்திருந்தது. ரெஸ்டாரன்ட்கள் மற்றும் சாலையோர உணவகங்களும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் பல மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளில் பல தளர்வுகளை வழங்க தொடங்கியுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 39,796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 3,05,85,229 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இறந்தவர்களின் எண்ணிக்கை 544 என்றும், மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 4,02,728 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.