தமிழக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கூடுதல் கடன் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு சார்பில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழு:
சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், கிராம மட்டத்தில் 10-20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்களாகும். இந்த குழுக்களுக்கு அரசு சார்பில் சுழல்நிதி கடன்,பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்படுகிறது.
BSNL பயனர்கள் கவனத்திற்கு – தினசரி 2 GB வழங்கும் திட்டம்!
இது தமிழ்நாடு மாநில அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் திட்டம் ஆகும். பெண்களை 12 முதல் 20 நபர் வரை கொண்ட குழுவாக அரசு சார நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் அமைத்து செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய பெண்கள் தொழில் புரிய உதவியாக உள்ளது. இந்நிலையில் மகளிர் சுய உதவி குழு குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக திருமண உதவித் திட்டம் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
பெண்கள் தங்களது சொந்த உழைப்பில் பிள்ளைகளை படிக்க வைக்கவும், குடும்பத்தை உரிய நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மகளிர் சுய உதவி குழு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆலோசனை படி, கூட்டுறவு வங்கிகளில் பெண்களுக்கு கடன் வழங்க கூட்டுறவுத்துறை பெரும் உதவியாக இருக்கும். மேலும் அவர்களுக்கு கூடுதல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.