1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா பேரலை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த பள்ளிகளை மீண்டுமாக திறக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நாளை (ஜூலை 1) முதல் ஒன்றிலிருந்து 8 வரையுள்ள வகுப்புகள் மீண்டுமாக துவங்க உள்ளது.
பள்ளிகள் திறப்பு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா 2 ஆம் அலை எதிரொலியாக கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி முதல் இன்று வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் சரிந்து வரும் சூழலில், கிட்டத்தட்ட 100 நாட்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டுமாக திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு, நாளை (ஜூலை 1) முதல் பள்ளிகள் மீண்டுமாக செயல்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும் புதிய மாணவர் சேர்க்கை பணி தொடர்புடைய ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 1 முதல், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அடிப்படைக்கல்வி கவுன்சிலால் நடத்தப்படும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
ஜூலை 1 முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அமல் – பிரான்ஸ் அரசு!
ஆனால் அந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாணவர்கள் 9 ஆம் வகுப்பில் சேருவதற்காக, 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற டிசி வழங்கும் பணி, பாடப்புத்தகங்கள் விநியோகம், மதிய உணவு மற்றும் பள்ளி ஆடைகளுக்கான பணத்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளது.