தமிழக ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி? அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் முதியோர்களும், ஊனமுற்றவர்களும் அமர்ந்து உணவு உண்ணுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
வணிகர் சங்கம் கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து தற்போது சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவகங்களில் பார்சலுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் முதியோர்களும், ஊனமுற்றவர்களும் அமர்ந்து உணவு உண்ணுவதற்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா 2ம் அலை எதிரொலி – ஹோட்டல் துறை கடுமையான பாதிப்பு!
சென்னை கொளத்தூர் அடுத்த பூம்புகார் பகுதியில் தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையின் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த பேரவையின் மாநில தலைவர் சௌந்தர்ராஜன் கூறுகையில், ‘கொரோனா நோய் தொற்றின் 2ஆம் அலை தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் எடுத்துள்ள முயற்சி வரவேற்கத்தக்கது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்காக அரசு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், அடிதட்டு மக்களின் அவசர தேவைக்கு உதவி புரியும் வகையில் அடகு கடை, துணிக்கடை, பாத்திரக்கடை , செருப்பு கடை உள்ளிட்டவற்றை திறக்க அனுமதிக்க வேண்டும். மேலும் உணவகங்களில் வயதானவர்களும், ஊனமுற்றவர்களும் அமர்ந்து உணவு உண்ண அனுமதி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினர் சிலர், வணிகர்களிடம் மிரட்டல் தொனியில் பேசுவதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.