தமிழகத்தில் லாட்டரி விற்பனை மீண்டும் தொடக்கம்? வெளியான தகவல்!
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனை நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. தற்போது இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாட்டரி விற்பனை:
இந்தியாவில் சில மாநிலங்களில் லாட்டரி, அரசு அனுமதியுடன் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் லாட்டரி விற்பனை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு – வருமான வரித்துறை அறிவிப்பு!
மேலும் ஏற்கனவே தமிழக காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் அவர்கள் இதுகுறித்து தனது கருத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை உறுதி செய்யும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரைக்கு வருகை தந்திருந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் அவர்கள் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார். இதனால் தமிழகத்தில் விரைவில் லாட்டரி வந்துவிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அவர்கள் சந்திப்பை குறித்து சிலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி அவர்கள் கூறியதாவது, பிற மாநில லாட்டரிகளை தமிழகத்திற்குள் உள்ளே விடாமல் கேரள மாநிலத்தை போல் தமிழக அரசே லாட்டரி விற்பனையை நடத்தும் என்று தெரிவித்தனர். இதற்கான முறையான அறிவிப்பு தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் தற்போது லாட்டரி விரும்பிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.