தமிழகத்தில் புதிதாக 44 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் – தலைமை செயலாளர் உத்தரவு!!
தமிழக அரசுக்கு ஆதரவாக ஆஜராவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளைகளுக்கு 44 அரசு வழக்கறிஞர்களை தற்காலிகமாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு வழக்கறிஞர்கள்:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை அரசு வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் அவர்களும், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா அவர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் வேறு எந்த பதவிகளுக்கும் நிரந்தரமாக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை.
ஆதார் கார்டில் முகவரி மாற்றம் – வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!
ஆனால் ஏற்கனவே சிவில், கிரிமினல் வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராக 23 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் 29 பேர், மதுரை கிளையில் 15 பேர் என மொத்தம் 44 அரசு வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியாமனம் செய்யப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகள் முடிக்கப்படும் வரை இவர்கள் 44 பேரும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவதாக தலைமை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே திமுக வழக்கறிஞர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.