தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு – பாமக நிறுவனர் கண்டனம்!

0
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு - பாமக நிறுவனர் கண்டனம்!
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு - பாமக நிறுவனர் கண்டனம்!
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு – பாமக நிறுவனர் கண்டனம்!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் ஒரே பாடப்பிரிவை அதிக அளவு மாணவர்கள் தேர்வு செய்தால் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் பாடப் பிரிவுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை:

தமிழகத்தில் கொரோனா நோய்பரவலுக்கு மத்தியில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருகின்ற ஜூன் மாதம் 3வது வாரத்தில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்தார். மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் ஒரே பாடப்பிரிவை அதிக அளவு மாணவர்கள் தேர்வு செய்தால் அவர்களுக்கு 9,10 ஆம் வகுப்புகளில் இருந்து 50 வினாக்கள் கேட்கப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பாடப்பிரிவுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு – மின்சார வாரியம் அறிக்கை!!

தற்போது தமிழக அரசின் இந்த முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற அனைத்து துறைகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது மாநில அளவில் பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது முறையல்ல. இது சமூக நீதிக்கு எதிரானது. இதனை எவ்வாறு ஏற்க முடியும்.

தனியார் பள்ளிகளுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு மாணவர்களின் திறனை அறிவதற்கு சில கேள்விகள் நேரடியாக கேட்கப்படலாம் என்று நீதிபதி கூறினார். ஆனால் அவர் அதனை ஆலோசனையாக மட்டுமே கூறினார், தவிர ஆணையாக பிறப்பிக்கவில்லை. மேலும் இந்த கருத்து தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இது பொருந்தாது என்று தெரிவித்தார். தமிழகத்தில் பிளஸ் 1 சேர்க்கை தொடங்குவதற்கு அவசரப்படுவது ஏன்?

TN Job “FB  Group” Join Now

10ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது வரை மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். ஆனால் பிளஸ் 1 மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வா? என்று தனது எதிர்ப்பை பாமக நிறுவனம் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!