தமிழக தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!!
தொழில்நுட்ப கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் அரியர் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரியர் தேர்வுகள்:
தமிழகத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகளில் கடந்த செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அரியர் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெற்றது. இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களின் அறிவுரைப்படி, நேற்று (மே 31) வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் 5300 காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு – மறுவாய்ப்பு அளிக்க கோரிக்கை!
இந்த தேர்வுகள் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தால், டிசம்பர் 2020, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற்றது. தேர்வு எழுதிய 2,28,441 மாணவர்களில் 2,09,338 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தேர்ச்சி விகிதம் 91.63% ஆக உள்ளது. மேலும் 18,529 மாணவர்கள் இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை. தவிர 574 மாணவர்களின் தேர்ச்சி விகிதம் இன்னும் வெளியிடப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
அதன் படி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அரியர் தேர்வுகள் நடத்தப்படும். அரியர் தேர்வுக்கான கட்டணத்தை ஜூன் மாதம் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை செலுத்திக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.