மத்திய அரசின் ஆயுள் காப்பீடு திட்டம் – கொரோனா இறப்புக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு!
கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் காப்பீடு தொகையாக 2 லட்சம் பெற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காப்பீடு திட்டம்:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. தனது சொந்தங்களையும், நண்பர்களையும் மக்கள் இழந்து தவிக்கின்றனர். பரவி வரும் வைரஸ் ஒரு பெரிய உயிர்க்கொல்லி நோயாக உள்ளது. அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவிகளை செய்து வருகின்றன. மேலும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவிகளையும், நிவாரணங்களையும் அளித்து வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
TN Job “FB
Group” Join Now
இதனால் மத்திய அரசு வங்கிகள் மூலம் காப்பீடு தொகை வழங்க முடிவு செய்துள்ளது. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற திட்டங்கள் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களில் சேர்ந்து காப்பீடு செய்தவர்கள் விபத்தில் இறந்தால் 2 லட்சம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் மாதம் ரூ.330 செலுத்த வேண்டும்.
சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு இலவச அனுமதி – மத்திய அரசின் புதிய விதிமுறை!!
தற்போது, 18 முதல் 50 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 50 வயதுக்குள் இணைந்தவர்கள், 55 வயது வரை நீட்டித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு முறை வங்கியில் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து விட்டால், ஆண்டுதோறும் வங்கிக்கணக்கில் இருந்து, அதற்கான காப்பீட்டு பிரீமியம் தானாக எடுக்கப்படும். இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் ரூபாய் 2 லட்சம் காப்பீடு தொகை வழங்கப்படும். இதற்கு நபர் இறந்து, 45 நாட்களுக்குள் குடும்ப உறுப்பினரின் ஒருவர் அந்தந்த வங்கி கிளைகளில் காப்பீட்டு தொகை பெற, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.