தமிழக அரசுப்பணியாளர்கள் மே 30 வரை பணிக்கு வர விலக்கு – அரசு ஆணை!!
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் வரும் மே 30ம் தேதி வரை பணிக்கு வர விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அரசின் ஆணை:
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி, 34,867 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,01,580 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 404 பேர் தமிழகத்தில் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20,872 ஆக பதிவாகியுள்ளது. தொற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 15,54,759 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் நேற்று (மே 24) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மே 24 காலை 4 மணி முதல் மே 31 காலை 6 மணி வரை தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முதல்வரால் விதிக்கப்பட்டுள்ளது. அரசின் அத்தியாவசிய துறைகளை தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் முழுவதுமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு ஆவின் பால் டெலிவரி – ZOMATO, DUNZO நிறுவனங்கள் ஒப்பந்தம்!!
கொரோனா தொற்று பரவலின் தீவிரத்தை குறைப்பதற்காகவும், மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் நலனிற்காகவும் ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் மே 30 வரை அலுவலகத்திற்கு வருவதிலிருந்து முழுவதுமாக விலக்கு அளித்து தமிழக அரசு ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது.