ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் – மாநில அரசு அறிவிப்பு!!!
இமாச்சலப் பிரதேசத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஏப்ரல் 4ம் தேதி வரை மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று:
2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் தொடங்கியது. தொற்று அதிகரித்து வந்த காரணத்தால் நாடு முழுவதும் 2020 மார்ச் மாத இறுதி வாரத்தில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. மேலும், பாடங்கள் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது.
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அதிரடி உத்தரவு!!!
பள்ளிகள் திறப்பு:
கொரோனா ஊரடங்கினால் தொற்று பரவல் குறையத் தொடங்கியது. இதனால் மத்திய அரசு மாநிலங்களில் உள்ள தொற்று பரவல் நிலவரத்தைப் பொறுத்து பள்ளிகளை திறக்க மாநிலங்களுக்கு அனுமதியளித்தது. இதனால் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் தொற்று குறைந்ததால் பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
பள்ளிகள் மூடல்:
இந்நிலையில் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால், மாநிலத்தில் தொற்று பரவல் நிலை குறித்து முதல்வர் ஜெயராம் தாகூர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் மாநிலம் முழுவதும் ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவித்தார். மேலும், மாநிலத்தில் உள்ள நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்