Post Office தினசரி ரூ.95 முதலீடு, ரூ.14 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் இன்சூரன்ஸ் திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம்
இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலை சந்தித்து வந்தனர். அதனால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீடுகளில் செலுத்தத் தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் அதிகளவு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் சேமிப்பு திட்டங்களில் குறைவான முதலீட்டில் அதிக வட்டி தொகையை முதலீட்டாளர்கள் பெற முடிகிறது. அத்துடன் குறைந்தபட்சமாக 100 ரூபாய் இருந்து சேமிப்புத் திட்டங்களில் கணக்கை தொடங்க முடியும்.
குறைந்த வட்டியில் SBI தங்க நகைக்கடன் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தற்போது சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் குறைந்த பிரீமிய தொகையை செலுத்தி அதிக லாபத்தை பெற முடிகிறது. அதனால் கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இத்திட்டத்தில் 14 லட்சம் ரூபாய் வரையில் க்ளைம் செய்து கொள்ளும் வசதிகளும் உள்ளது. இதில் இணைவதற்கு 19 வயது முதல் 45 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். இந்த பாலிசியில் இரண்டு திட்டங்கள் உள்ளது. இதில் ஒன்று 15 ஆண்டுகால பாலிசி மற்றொன்று 20 ஆண்டுகால பாலிசி ஆகும்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு! வலுக்கும் குற்றச்சாட்டு!
இதில் நாள் ஒன்றுக்கு ரூ.95 முதலீடாக செலுத்த வேண்டும். அதன்படி ஒரு ஆண்டுக்கு 32,735 ரூபாய் செலுத்த வேண்டும். இதையடுத்து 15 ஆண்டுகால முதிர்வு காலத்தின் முடிவில் 13.72 லட்ச ரூபாய் சேமிக்க முடிகிறது. இத்திட்டத்தின் குறைந்தபட்ச உறுதி தொகையாக 10000 ரூபாயும், அதிகபட்ச உறுதி தொகையாக 10 லட்ச ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் பாலிசி காலம் முடியும் முன் முதலீட்டாளர்கள் இறக்கும் போது அவருடைய சேமிப்பு தொகையானது நாமினிக்கு வழங்கப்படுகிறது.