தமிழகம் – கேரளா இடையேயான 86 ரயில்களில் கட்டணம் குறைப்பு | பயணிகள் மகிழ்ச்சி!
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே இயக்கப்படும் 86 ரயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் கட்டணம்:
தமிழகத்தில் கடந்த வருடம் முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் அனைத்து துறைகளும் கடும் வீழ்ச்சி அடைந்தது. அதிலும் ரயில்வே துறை அரசின் கட்டுப்பாடுகளால் தொடர் சரிவை சந்தித்தது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. இதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு அரசின் ஊரடங்கு கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா பரவல் குறைந்து வந்ததை அடுத்து பொதுமக்கள் வசதிக்காக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் மீண்டும் இயங்க தொடங்கியது.
ஷார்ட்ஸ் அணிந்து சென்ற வாடிக்கையாளருக்கு வங்கியினுள் அனுமதி இல்லை – SBI விளக்கம்!
பொது மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக முன்பதிவு ரயில்கள் மட்டுமே இடக்கப்பட்டது. விடுமுறை மற்றும் பண்டிகை தினங்களில் ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தட்கல் கட்டணம் வசூலிக்கப்பட்டு முக்கிய வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. ரயில் கட்டணம் ரூ.90 முதல் ரூ.400 வரை அதிகரிக்கப்பட்டது. தற்போது வழக்கமான அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறையாத நிலையில் முழுவதுமாக ரயில்கள் இயக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் திட்டம்!
அதனை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் 86 ரயில்களின் கட்டணம் பெருமளவு குறைந்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்பதிவில்லாத ரயில்கள் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை. ஒரு சில முக்கிய ரயில்களில் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளை இணைத்துள்ளனர். ரயில் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும். ரயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.