நாடு முழுவதும் 90 மாவட்டங்களில் 80% கொரோனா பாதிப்பு – மத்திய அரசு தகவல்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் 90 மாவட்டங்களில் 80% தொற்று பதிவாகி வருகிறது என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த மே மாதம் முதல் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு கடந்த மாதம் 4 லட்சம் வரை பதிவாகியது. அதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. அதன் விளைவாக கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளது.
தமிழகத்தில் திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை ரூ.2000 – அரசாணை வெளியீடு!
தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கு அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து மத்திய ஒன்றிய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் 90 மாவட்டங்களில் 80% சதவிகிதத்திற்கு அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் மட்டும் 12 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகமாக உள்ளது. மேலும் பிரிட்டன், ரஷ்யா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.