தமிழகத்தில் திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை ரூ.2000 – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திருநங்கைகளுக்கு முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இரண்டாம் தவணை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை சரி செய்ய அரசு தரப்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியது. இதனால் மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால் அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 நிவாரண நிதி இரண்டு தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Microsoft நிறுவன ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் போனஸ் – கொரோனா நிவாரணம்!
இந்த நிலையில் ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரணத் தொகையாக ரூ.4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. திருநங்கைகள் வாரியம் மூலமாக பதிவு செய்யப்பட்ட திருநங்கைகள் 8,493 பேருக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது இரண்டாம் தவணை வழங்க ஒரு கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையானது தற்போது திருநங்கை வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 8,591 திருநங்கைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திருநங்கைகள் பலன் அடைந்து உள்ளனர்.