70 சதவீதம் பேர் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கலாம் – ஜெரோதா சிஇஓ அறிவிப்பு!!
கொரோனா பரவலின் காரணமாக தற்போது ஜெரோதா நிறுவனத்தின் சிஇஓ தங்களது ஊழியர்கள் 70 சதவீதம் பேர் வீட்டில் இருந்தபடியே நிரந்தரமாக பணியினை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு
கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு கொரோனா நோய் பரவலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து மாநில அரசுகளும் கடுமையான ஊரடங்கு உத்தரவினை நடைமுறைப்படுத்தியது. இதன் எதிரொலியாக பலர் அலுவலகத்திற்கு சென்று பணியினை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக அனைவரும் தங்களது வீட்டில் இருந்தபடியே பணியினை மேற்கொள்ளலாம் என்று பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது.
ஐபோன் (iPhone) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – WiFi பிழையை நீக்குவதற்கான எளிய வழிமுறைகள்!
பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்த காரணத்தால் வீட்டில் இருந்து வேலை செய்ய தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர். இதற்கு ஜெரோதா நிறுவனமும் விதிவிலக்கல்ல. இந்த நிறுவனம் இந்தியாவின் மிக பெரிய புரோக்கரேஜ் நிறுவனம் ஆகும். இதில் தற்போது 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இப்படியான சுழலில் இந்த நிறுவனத்தின் சிஇஓ வேணு மாதவ் இது குறித்து கூறியதாவது, “கொரோனா பரவல் எதிரொலியாக எங்கள் பணியாளர்களில் 70 சதவீதம் பேர் வீட்டில் இருந்தபடியே பணியினை மேற்கொள்ளலாம். நிரந்தரமாக வீட்டில் இருந்தபடியே அவர்கள் வேலை செய்யலாம். மேலும், மனிதவள மேம்பாட்டு குழு, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை வேலை பார்ப்பவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே தங்களது பணியினை மேற்கொள்ளலாம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.