6, 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் கட்டாய தேர்வு – வெளியான ஷாக் அறிவிப்பு!!
6 மற்றும் 8ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை கட்டாயத்தேர்வு அடிப்படையில் மட்டுமே நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 மற்றும் 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது அடிப்படையில் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு 5ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே 6 மற்றும் 8ம் வகுப்பில் சேர முடியும். மேலும், ஐந்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் ஐந்தாம் வகுப்பிலேயே இருக்க வேண்டும்படியான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் 6 மற்றும் 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் அல்லது 6 மற்றும் 8ம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 6 மட்டும் 8ம் வகுப்பு செல்ல இருக்கும் மாணவர்களுக்கான இந்த கட்டாயத் தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் எனவும், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு கோடை மாதத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டு மீண்டும் ஜூன் மாதத்தில் மறுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு – முக்கிய அறிவுறுத்தல்!
அதாவது, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வில் கணிதம், அறிவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும், எட்டாம் வகுப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக சமூக அறிவியல் பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 35% மதிப்பெண் பெறும் மாணவர்கள் ஆறு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். இந்த மறு தேர்விலும் தோல்வியடையும் மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் பயில வேண்டும்.