மத்திய அரசு வழங்கும் ரூ.6000 உதவித்தொகை – 10வது தவணை வரவு, அறிந்து கொள்வது எப்படி?
இந்தியாவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் தொகையின் 10வது தவணை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது பற்றி இப்பதிவில் காண்போம்.
கிசான் திட்டம்:
இந்தியாவில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு கிசான் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது விவசாயிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 கட்டங்களாக ரூபாய் 6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூபாய் 2 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் பயன்பெற முடியும்.
டிசம்பர் மாத ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டுதல்கள் – மாநில அரசு வெளியீடு!
இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் தேவையான ஆவணங்களுடன் வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் இதுவரை 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 9 அன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 9ம் தவணையை வெளியிட்டார். இந்த நிலையில் அடுத்ததாக 10வது தவணை கிசான் தொகை டிசம்பர் 15ம் தேதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழிமுறைகள் :
- முதலில் https://pmkisan.gov.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- இதில் ஓப்பன் ஆகும் முகப்பு பக்கத்தில் Farmers Corner section என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் உங்களின் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை உள்ளிடவும்.
- அடுத்து ஓப்பன் ஆகும் பக்கத்தில் பயனாளி நிலை என்பதை தேர்ந்தெடுத்து தனது விண்ணப்ப நிலையை சரிபார்க்கவும்.
- மேலும் பயனாளியின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை பதிவிட்டு நீங்கள் பெற்ற கிசான் தொகையை தெரிந்து கொள்ளலாம். இதில் 10வது கிசான் தவணை குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.