அமேசான் நிறுவனத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு – இன்று முதல் ஆட்சேர்ப்பு!
அமேசான் நிறுவனம் வரவிருக்கும் மாதங்களில் உலகளவில் கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்காக 55,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது என்று தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
ஊரடங்கு உத்தரவால் நாடே நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிற்குள்ளாகவே முடங்கிப்போய் உட்கார்ந்துள்ளனர். தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஊரடங்கின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றனர். உலகின் பல முன்னணி நிறுவனங்களும் பொருளாதார சிக்கலில் இருக்கின்றன. இந்நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான் புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கோரிக்கை!
ஜூலை மாதத்தில் அமேசானின் உயர்மட்ட பதவியான தலைமை நிர்வாகி பதவிக்கு ஜாஸி முன்னேறி உள்ளார். இவர் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, சில்லறை விற்பனை, கிளவுட் மற்றும் விளம்பரம் ஆகியவற்றுடன் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட இன்னும் அதிக பலம் நிறுவனத்திற்கு தேவைப்படுவதாக கூறியுள்ளார். இனி வரவிருக்கும் மாதங்களில் உலகளவில் கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்காக 55,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது என்று தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸி அறிவிதித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அமேசானின் வருடாந்திர கண்காட்சி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கும் நிலையில் இது தான் வேலைவாய்ப்பு அறிவிப்புக்கான சரியான நேரமாக கருதுவதாக கோரினர். இந்த 55,000 க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்பில் 40,000 க்கும் அதிகமான வேலைகள் அமெரிக்காவில் இருக்கும், மற்றவை இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் என்று கூறியுள்ளார்.