தமிழக அரசு அறிவித்த 5000 ரூபாய் சம்பள உயர்வு – ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!

0
தமிழக அரசு அறிவித்த 5000 ரூபாய் சம்பள உயர்வு - ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!
தமிழக அரசு அறிவித்த 5000 ரூபாய் சம்பள உயர்வு - ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!
தமிழக அரசு அறிவித்த 5000 ரூபாய் சம்பள உயர்வு – ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரிகளில் வேலை பார்த்து வரும் தற்காலிக பேராசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தினை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பேராசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொகுப்பூதியம் உயர்வு:

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி 4 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த மாதம் முதல் தான் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட ஆரம்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கல்லூரிகளில் நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் தற்காலிக பேராசிரியர்களாக 1,661 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம்தோறும் 15,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கபட்டு வந்தது.

தமிழக பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு – 66 பேருக்கு வாழ்நாள் தடை விதிப்பு!

இந்த தொகுப்பூதியம் கடந்த 11 மாதங்களாக அவர்களுக்கு வழங்கப்பட்டும் வருகிறது. இந்த தொகையினை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளின் எதிரொலியாக தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்களுக்கு தொகுப்பூதியம் 15,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தற்காலிக பேராசிரியர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஒரு செய்தி குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – டெண்டர் ஓராண்டு காலம் நீட்டிப்பு!

அதில், ‘2021-2022ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் மொத்தமாக 1661 பேர் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 15,000 ரூபாய் தொகுப்பூதியம் 5000 ரூபாய் உயர்த்தப்பட்டு 20,000 ரூபாய் ஆக வழங்கப்பட இருக்கிறது. தொடர்ந்து 11 மாதங்கள் இந்த தொகுப்பூதியம் வழங்கப்பட இருக்கிறது. இவர்களை அந்தந்த கல்லூரிகள் வரும் 2022 ஆம் ஆண்டு வரை பணி அமர்த்தி கொள்ளலாம்’ இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது தொகுப்பூதிய உயர்வுக்காக தமிழக அரசு சார்பில் 36.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!