தமிழக அரசு சார்பில் ரூ.50000 நிதியுதவி – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
ரூ.50 ஆயிரம் நிவாரணம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கருணைத் தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் கொரோனா தொற்றை பேரிடராக அறிவித்து நிவாரண நிதியாக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரமும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம் என்று உத்தரவிட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA & DR நிலுவைத்தொகை? இம்மாதம் அறிவிப்புகள் வெளியீடு!
அதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கி வருகின்றனர். அதேபோல் தமிழகத்தில் கொரோனாவை பேரிடராக கருதி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 697 பேர் கொரோனா பேரிடர் இழப்பீடு கோரி இணையம் மற்றும் நேரில் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்? முக்கிய கோரிக்கை!
அதில் 506 பேரின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வாரிசுதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 148 மனுக்கள் பரிசீலனையில் இருந்து வருகின்றன. மற்ற விண்ணப்பங்கள் ஒரு சில சிக்கல்கள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கொரோனா தொற்றால் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பின்வரும் ஆவணங்களை கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர் பேரிடர் மேலாண்மை பிரிவு அல்லது தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
கொரோனா இழப்பீடு பெறுவதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
1. கொரோனா பரிசோதனை சிகிச்சை ஆவணம்
2. இறப்புக்கான காரணம் குறித்த சான்று
3. வாரிசு சான்றிதழ்
4. வங்கி கணக்கு விபரம்