ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சையின் போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் டெல்லியில் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
நிவாரணம் ரூ.5 லட்சம்:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசிற்கு அறிவுரைகளை வழங்கி வருகிறது. கடந்த வருடம் இல்லாத அளவு அதிக பாதிப்பு இந்தியாவில் தற்போது இருக்கிறது. அரசுகள் பரிசோதனைகளை அதிகப்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு விழிபுணர்களும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த வைரஸ் மனித உடலில் சென்று நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. மூச்சு விடுவதற்கு சிரமப்படுகின்றனர் . அதனால் அவர்களுக்கு செயற்கையாக ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. இந்த ஆக்ஜிசன் நோயாளிகளுக்கு அளிப்பதில் பற்றாக்குறை நிலவியது. ஆக்சிஜன் போதிய அளவு இல்லாததால் கொரோனா நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் நாடு முழுவதும் உயிரிழந்தனர்.
ஜூன் 1 முதல் முழு ஊரடங்கு தளர்வுகள்? முதல்வர் இன்று ஆலோசனை!!
குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாததால் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்த நோயாளிகளின் குடும்பங்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களுக்கு இந்த தொகை கூடுதலாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.