5 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் பண்டிகை தினத்தை முன்னிட்டு ரிசர்வ் வங்கி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த வாரம் ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு விடுமுறை:
இந்தியாவில் வங்கிகள் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக உள்ளதால் ஊரடங்கு காலத்திலும் பகுதி நேரமாக செயல்பட்டது. ஆன்லைன் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் அரசு விடுமுறை தினங்களில் அலுவலங்களை தொடர்ந்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும். வழக்கமாக மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். மேலும் பண்டிகை தினங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
அன் ஸ்கில்டு மற்றும் செமி ஸ்கில்டு ஊழியர்களுக்கு DA உயர்வு – அரசு உத்தரவு!
அந்த வகையில் கடந்த மாதம் பண்டிகை தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மாநிலங்களை பொறுத்து விடுமுறை மாறுபட்டது. அதனை தொடர்ந்து கடந்த வாரம் தீபாவளி உள்ளிட்ட பிற பண்டிகைகள் காரணமாக வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் சத் பூஜை வாங்கலா, திருவிழா உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு இந்த வாரமும் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
- 10.11.2021 – சத் பூஜை / சூர்ய பஷ்டி தலா சாத் பண்டிகை
- 11.11.2021 – சத் பூஜை – பாட்னா
- 12.11.2021 – வாங்கலா திருவிழா – ஷில்லாங்
- 13.11.2021 – இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை
- 14.11.2021 – ஞாயிற்றுக்கிழமை
மேற்கண்ட விடுமுறை நாட்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.