விவசாயிகளுக்கு 45% வரை மானியம் – திட்டம் பற்றிய முழு விவரம் இதோ!
இந்தியாவில் மத்திய அரசு விவசாயிகளின் எரிபொருள் மற்றும் மின்சார செலவினை குறைக்கும் வகையில் மானியத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக 47 சதவீதம் மானியம் கிடைக்கும்.
மானியத்தொகை:
இந்தியாவில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை எளிய முறையில் பெறும் வகையில் பிஎம் கிசான் திட்டத்தின் வாயிலாக வருடத்திற்கு 6000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தொகையானது ரூ.2000 ஒரு வருடத்திற்கு மூன்று முறை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதே போல மின்சாரம் மற்றும் எரிபொருள்களை பெற பிஎம் குசும் யோஜனா திட்டத்தின் கீழ் மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் ரயில்கள் இயக்கம் – வெளியான தகவல்!
தங்களது நிலத்தில் சோலார் பம்புகளை அமைக்க விரும்பும் விவசாயிகள் இத்திட்டத்தின் வாயிலாக 45 சதவீதத்தை மானிய தொகையாக பெறலாம். இதனை பெற விரும்பு விவசாயிகளுக்கு 4 – 5 ஏக்கர் வரை நிலம் இருக்க வேண்டும். இந்த நிலத்தில் ஒரு ஆண்டில் 15 யூனிட் மின்சாரம் செய்வதற்கான வசதிகளை அரசு வழங்கும். இந்த மின்சாரத்தை விற்பனை செய்ததன் மூலம் விவசாயிகள் நல்ல லாபத்தினை பெறுவார்கள்.