கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 43% பேருக்கு வேலை – ‘நாக்குரி ஜாப்ஸ்பீக்’ நிறுவனம் அறிக்கை!
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 43% பேருக்கு புதிதாக வேலை வழங்கப்பட்டுள்ளதாக ‘நாக்குரி ஜாப்ஸ்பீக்’ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
43% பேருக்கு புதிய வேலை:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்துள்ளனர். ஏனெனில் கொரோனா காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து தொழில்நுட்பமும் சற்று முன்னேறி வருகிறது. அந்த வகையில் அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்திட்டம் மற்றும், 5 ஜி சேவைகள் உள்ளிட்ட முயற்சிகளினால் தொலைத்தொடர்பு துறையில் அதிக வேலை வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் கொரோனாவை தொடர்ந்து சில்லறை விற்பனை, விருந்தோம்பல் மற்றும் பயணம் ஆகிய துறைகளும் விடுமுறை காலத்தை ஒட்டி மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதனால் இந்த குறிப்பிட்ட துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதனால் கடந்த அக்டோபருடன் இந்த ஆண்டு ஒப்பிடுகையில் 85% அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, வங்கி, நிதி சேவைகள் ஆகிய துறைகளும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!
அதனால் புதிய பணிகளில் பணியமர்த்தும் நிலையானது கொரோனாவுக்கு முந்தைய காலநிலை இந்த ஆண்டு அக்டோபரில் திரும்பி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக புதிய வேலை கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 43% பேருக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ‘நாக்குரி ஜாப்ஸ்பீக்’ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப துறை நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதால் தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவையும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.