தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.4000 உதவித்தொகை – இம்மாதமே கடைசி!
தமிழகத்தில் உள்ள தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் உதவித்தொகை வழங்கப்படும். 2021-22 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உதவித்தொகை அறிவிப்பு:
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு சிறப்பு பங்காற்றிய தமிழ் அறிஞர்களை போற்றும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலமாக உதவித்தொகை வழங்கப்படுகின்றன. இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் 14 நாட்களுக்கு வங்கி விடுமுறை – முழு பட்டியல் விவரம்!
இந்த உதவித்தொகை பெற விண்ணப்பதாரர்கள் 01.01.2021 அன்று 58 வயது நிரம்பி இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமான சான்றிதழ், தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணி ஆற்றி வருவதற்கான தகுதி நிலை சான்று தமிழ் அறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களுக்கு மாதம் ரூபாய் 3500 உதவித்தொகையாக வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் மருத்துவப்படி ரூ.500 என மொத்தம் ரூ.4000 வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் http://tamilvalarchithurai.com/ என்ற இணையதளத்திலோ இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்கள் அல்லது மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அல்லது மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக வழங்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்கம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பங்களை அனுப்ப இந்த மாதமே கடைசி நாள் ஆகும்.