34 மாணவர்கள் கணிதத் தேர்வில் தோல்வி விவகாரம் – பெற்றோர்கள் முக்கிய கோரிக்கை!

0
34 மாணவர்கள் கணிதத் தேர்வில் தோல்வி விவகாரம் - பெற்றோர்கள் முக்கிய கோரிக்கை!
34 மாணவர்கள் கணிதத் தேர்வில் தோல்வி விவகாரம் - பெற்றோர்கள் முக்கிய கோரிக்கை!
34 மாணவர்கள் கணிதத் தேர்வில் தோல்வி விவகாரம் – பெற்றோர்கள் முக்கிய கோரிக்கை!

உதகையில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு ஆசிரியர் உதவிய காரணத்தினால் அந்த அறையில் உள்ள அனைத்து மாணவர்களும் தோல்வி என முடிவுகள் வெளியான விவகாரத்தில் பெற்றோர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

கணிதத் தேர்வில் தோல்வி:

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வு மார்ச் 27ஆம் தேதி நடைபெற்ற போது உதகை அருகே உள்ள சாம்ராஜ் அரசு பள்ளியில் கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அடிப்படையில் அந்த சாம்ராஜ் அரசு பள்ளியில் 3 மற்றும் 4 ஆம் அறையில் கணித தேர்வு எழுதிய 34 மாணவர்களுக்கும் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதாவது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த 34 மாணவர்களுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது.

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு மே 15 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இதனைத் தொடர்ந்து தற்போது அந்த 34 மாணவர்களும் கணித தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவர்களும் பெற்றோர்களும் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். அதாவது, கணித தேர்வில் இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே அந்த ஆசிரியர் உதவியதாக கூறப்படுகிறது. எனவே, அந்த இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!