300 வகையான பூச்செடிகளை வாடகைக்கு விட முடிவு – தோட்டக்கலைத் துறை அறிவிப்பு!

0
300 வகையான பூச்செடிகளை வாடகைக்கு விட முடிவு - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு!
300 வகையான பூச்செடிகளை வாடகைக்கு விட முடிவு - தோட்டக்கலைத் துறை அறிவிப்பு!
300 வகையான பூச்செடிகளை வாடகைக்கு விட முடிவு – தோட்டக்கலைத் துறை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் விசேஷ நாட்களில் அலங்காரம் செய்யும்படியாக 300 வகையான பூச்செடிகளை வாடகைக்கு தர இருப்பதாக தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

பூச்செடி:

தமிழகத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகளில் ஏராளமான செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் கிட்டத்தட்ட 300 வகையான பூச்செடிகளை வாடகைக்கு விட தயார் நிலையில் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது, திருமணம், பிறந்தநாள் விழா உள்ளிட்ட விசேஷ தினங்களில் மேடையை அலங்காரம் செய்வதற்கு தேவையான பூச்செடிகளை வாடகை விலையில் பெற்றுக் கொள்ளும் படியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருமல் மருந்தின் தயாரிப்பை உடனடியாக நிறுத்த உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு!

அதாவது, ஒரு நாளைக்கு ஒரு செடிக்கு ரூபாய் 80 வீதம் தேவையான பூச்செடிகளை பெற்றுக் கொள்ளலாம். இது மட்டுமில்லாமல் படம் சூட்டிங், சீரியல் சூட் ஆகியவற்றிற்கும் வாடகைக்கு விடப்படும் எனவும், விரும்பினால் வீட்டிற்க்கே வந்து டெலிவரி செய்து கொடுக்கப்படும் எனத் தோட்டக்கலை துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகைக்கு மட்டுமல்லாமல் வீட்டிற்கு தேவையான அலங்கார பூச்செடிகளை சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!