தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப்படிப்புக்கு இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு!
சட்ட படிப்பை பயில்வது குறித்து பார் கவுன்சில் சில விளக்கங்களை அளித்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்ட படிப்பு;
தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்பை படிக்க 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டியது அவசியம் என்று பார் கவுன்சில் அறிவித்தது. அதன் படி மாணவர்கள் மற்ற பட்ட படிப்புகளை போல 12ம் வகுப்பு முடித்த பின்னரே சட்ட படிப்புக்கும் விண்ணப்பித்து வந்தனர். 10ம் வகுப்பு முடித்தவர்களால் சட்ட படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கோவை மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படிக்காமல் 10ம் வகுப்பிற்கு பிறகு டிப்ளமோ படித்தவர்களையும் 3 ஆண்டு சட்டப்படிப்பு பயில அனுமதிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிமன்றம் தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழத்திற்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மறுவாய்ப்பு – தேர்வு கால அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!
Download ExamsDaily Mobile App
அதாவது பார் கவுன்சில் அளித்த விளக்கதையேற்று 10ம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்க தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.