அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!
ஒடிசா மாநில அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் DR ஆகியவற்றை 3% ஆக உயர்த்தியுள்ள நிலையில் மாநில அரசு ஊழியர்களுக்கு மொத்தமாக 31 சதவீத DA தொகை கிடைக்க இருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
DA உயர்வு
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒடிசா மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநில அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) தற்போது மூன்று சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் 31% அகவிலைப்படி தொகையை ஒடிசா மாநில அரசு ஊழியர்களும் பெற உள்ளனர்.
RRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்த முழு விவரம் இதோ!
இந்த DA உயர்வு மூலம் ஊழியர்களின் சம்பளத்திலும் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஒடிசா அரசின் இந்த அறிவிப்பானது ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வர உள்ளது. இப்போது மாநில அரசின் இந்த அறிவிப்பை அடுத்து, பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்த முடிவின் மூலம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதிப் பலன்களைப் பெறுவார்கள் என முதல்வர் அலுவலகம் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நிறைவு – ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!
இப்போது ஒடிசா மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களைப் போலவே 31% DA மற்றும் DR நன்மைகளைப் பெற உள்ளனர். அந்த வகையில் ஒடிசா அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் 30 சதவீத நிலுவைத் தொகையை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஜனவரி 2016 மற்றும் ஆகஸ்ட் 2017 க்கு இடையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தில் 50 சதவீத நிலுவைத் தொகையை ஊழியர்கள் பெறுவார்கள். இந்த முடிவால் மாநில அரசின் 6 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.