தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இரண்டாம் உலக தமிழ் செம்மொழி மாநாடு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு:
தமிழ் மொழியின் சிறப்புகளையும் பெருமையையும் மேம்படுத்தும் விதமாகவும், அதனை கௌரவிக்கும் வகையிலும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தமிழகத்தின் மதுரை மாநகரில் 5 நாட்களுக்கு பெரும் விழாவாக நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தற்போது இரண்டாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்தான அறிவிப்பில் 5 நாட்களுக்கு நடத்தப்படும் இந்த செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
திருப்பூர் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.43,000/-
தமிழக அரசு தமிழ் மொழியை பல்வேறு செயல்பாடுகளின் வாயிலாகவும் முன்னிலைப்படுத்தி வருவதாகவும், இதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலக தமிழ் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சீரோடும் சிறப்போடும் சிந்தனை செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.