TNPSC 200+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – திட்டமிட்டபடி தேர்வு!

0
TNPSC 200+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - திட்டமிட்டபடி தேர்வு!
TNPSC 200+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - திட்டமிட்டபடி தேர்வு!
TNPSC 200+ காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – திட்டமிட்டபடி தேர்வு!

TNPSC தேர்வு வாரியத்தால் நகர் ஊரமைப்பு சார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் சில தினங்களில் இதற்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC தேர்வு:

தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNPSC) அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த காலிப்பணியிடங்கள் நிரப்புவது போட்டித்தேர்வுகள் மற்றும் நேரடி நியமன முறையிலும் TNPSC தேர்வு வாரியம் பணி நியமனம் செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக TPSC தேர்வு வாரியத்தால் எவ்வித தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகர் ஊரமைப்பு சார்நிலை மற்றும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு – 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு!

அதனை தொடர்ந்து எழுத்து தேர்வுகள் நடத்துவது குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் நகர் ஊரமைப்பு சார்நிலைப்பணிகளில் அடங்கிய கட்டடக்கலை மற்றும் திட்ட உதவியாளர் பதவிகளுக்கான தேர்வுகள் வரும் ஜன.8ம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு வரும் ஜன.9ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவி வரும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Post Office FD Scheme: அஞ்சல் அலுவலகம் வழங்கும் சூப்பர் திட்டங்கள் – முக்கிய தகவல்கள்!

அதனால் TNPSC தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நகர் ஊரமைப்பு சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகள் மற்றும் புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறுமா என்ற சந்தேகம் விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி திட்டமிட்டபடி நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகள் மற்றும் புள்ளியியல் சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுகள் ஜன.8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து விரைவில் TNPSC தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!