அடுத்தடுத்து இரண்டு மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – கொரோனா தடுப்பில் முதல்வர்கள் தீவிரம்..!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்நிலையில் இன்று அடுத்தடுத்து இரண்டு மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
எந்தெந்த மாநிலங்கள்:
இந்தியாவில் ஏற்கனவே ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்தெந்த மாநில முதல்வர்கள் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் மஹாராஷ்டிரா முதல்வர் உன்னவ் தாக்கரே ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக முதல் இடத்தில் இருப்பது மஹாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே நிலை நீடித்தால் மஹாராஷ்டிராவில் ஏப்ரல் 30க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.
3D பிரிண்டிங்கில் முகக்கவசம் – அசத்தும் டெல்லி இளைஞர்..!
அதற்கு அடுத்தபடியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டித்து உள்ளார். மேலும் மே 10 வரை கல்வி நிறுவனங்களை மூடவும் அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
ஊரடங்கை நீட்டித்தால் ஒரு குடும்பத்திற்கு ரூ. 2000 – பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வரின் கோரிக்கைகள்..!
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்