தமிழகத்தில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் கொடுத்த அதிரடி அப்டேட்!
தமிழகத்தில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து பேசிய அமைச்சர் தாமோ. அன்பரன் வேலை வாய்ப்பு குறித்து முதல்வர் புத்தகம் வெளியிடுவார் என தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு:
சென்னையில் இரண்டாவது நாளாக இன்று உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர் மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவன தலைவர்களும் வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பல்வேறு முதலீடு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
ஒரே நாளில் 682 பேருக்கு கொரோனா உறுதி – கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரம்!!
இது வரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் கணிசமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தாமோதரன் தெரிவித்தார். அத்துடன் 2.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் வகையில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் இதன் வாயிலாக மாவட்டம் தோறும் இனி தொழிற்சாலைகள் வரக்கூடும். இது தொடர்பான வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் புத்தகமாக வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.