விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் மீண்டும் களமிறங்கும் 18 போட்டியாளர்கள் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. முதல் நாளில் களமிறங்கிய 18 போட்டியாளர்களும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது இந்த வார முடிவில் தெரியவர இருக்கிறது. மேலும் தற்போது ராஜூ, பிரியங்கா, நிரூப், பாவ்னி, அமீர் ஆகியோர் இறுதி சுற்றிற்கு தகுதி பெற்று இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் தாமரை யாரும் எதிர்பாராத வகையில் வெளியேறினார். அதனால் ரசிகர்கள் கோவத்தில் இருக்கின்றனர்.
மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் “பிக்பாஸ்” தாமரை – ரசிகர்கள் உற்சாகம்!
இருந்தாலும் போட்டியாளர்களில் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்கள் தான் வெற்றி கோப்பையை கொண்டு செல்ல வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் இறுதி போட்டிக்கு முன்னதாக இறுதி சுற்றில் இருக்கும் போட்டியாளர்களை ஊக்குவிக்க, இதுவரை விளையாடி வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் வர இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அவர்கள் அனைவரும் வருகிற பொங்கல் அன்று வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடனில் சிக்கித் தவிக்கும் ‘பிக் பாஸ்’ புகழ் தாமரை செல்வியின் குடும்பம் – சோதனைகளை கடந்த சாதனை!
இது குறித்த தகவல் வெளியானதால் மக்கள் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் வெற்றி கோப்பையை தட்டி செல்லும் போட்டியாளர் யார் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் 6 நாட்களில் இது குறித்த தகவல் வெளியாகி விடும் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.