சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறப்பு – தினசரி 15,000 பக்தர்களுக்கு அனுமதி!
கேரளாவில் ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 23ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் முன்பதிவின் அடிப்படையில் நாள்தோறும் 15,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவில்:
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக சபரிமலை நடை மூடப்பட்டது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி பயன்பட்டால் ஓரளவு தொற்று குறைந்து வந்தது. அதனால் மாதாந்திர சிறப்பு பூஜைகளுக்காக கோவில் நடை திறப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பூஜைகள் நடைபெற்றது. கருக்கிடக மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு ஜூலை 16ம் தேதி பக்தர்கள் வருகைக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது. மேலும் பக்தர்கள் தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு – இனி டிக்கெட்டில் ஈஸியா பெயரை மாற்றலாம்!
அதனை தொடர்ந்து ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அதிகாலை கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் போன்றவை நடைபெற்றன. கேரளாவில் ஆகஸ்ட் 21 அன்று ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 23ம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆன்லைனில் முன்பதிவு அடிப்படையில் தினசரி 15,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் பரிசோதனை செய்யப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.