ரயில் பயணிகள் கவனத்திற்கு – இனி டிக்கெட்டில் ஈஸியா பெயரை மாற்றலாம்!
முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கு பதிலாக வேறொருவர் பெயருக்கு மாற்றி அமைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்கும் முறை மற்றும் கால அவகாசம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட்:
இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து சேவையாக அதிக ஊழியர்களை கொண்டு இயங்கி வருவது ரயில்வே துறை. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவையானது தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா பரிசோதனை, உடல் வெப்பநிலை, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
அரசுத் துறைகளில் உள்ள 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – முதல்வர் உரை!
தற்போது முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் வேறொரு நபரின் பெயருக்கு மாற்றி அமைக்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் ரத்து செய்யாமல் அதை வேறொருவர் பெயருக்கு மாற்றி அமைக்கலாம். இவ்வாறு மாற்றி அமைக்க ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு விண்ணப்பம் அளிப்பதன் மூலம் பயணிகள் பெயர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பயணம் செய்பவரின் பெயர் சேர்க்கப்படும்.
அரசு ஊழியர் தனது பணி நிமித்தமாக செல்ல நேரிட்டால் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்கலாம் என்றும் வேறு காரணங்களுக்காக அல்லது திருமணத்திற்கு செல்லும் போது இதுபோன்ற சூழல் ஏற்படும் பட்சத்தில் திருமண மற்றும் விருந்தின் அமைப்பாளர் தேவையான ஆவணங்களுடன் 48 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த சேவையை ஆன்லைன் மூலமே பயணிகள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பெயரை பயணி ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும் அவ்வாறு மாற்றப்பட்ட டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மீண்டும் மாற்ற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. டிக்கெட் பிரிண்ட் அவுட் எடுத்து டிக்கெட் புக் செய்யும் கவுண்டருக்கு சென்று யார் பெயருக்கு மாற்ற வேண்டுமோ அவரது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.