ஜனவரி 5 வரை 144 தடை உத்தரவு – மாநில அரசு அதிரடி உத்தரவு!
இந்தியாவின் உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ஓமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி 5ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஓமைக்ரான்:
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தென்னாபிரிக்காவில் இருந்து பரவ தொடங்கியது. இந்த ஓமைக்ரான் வகை உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பதிலேயே வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாகவும், இது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த கர்நாடகாவை சேர்ந்த 2 நபருக்கு முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாநிலங்களுக்கும் ஓமைக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நேர மாற்றம் அறிவிப்பு – அரசு பதிலளிக்க உத்தரவு!
இதுவரை இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் கொரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புதிய ஓமைக்ரான் கொரோனா பெரியவர்களை விட குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால் இந்தியாவில் ஓமைக்ரான் தடுப்பு பணிகள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி இந்திய விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் மக்களை தொற்றில் இருந்து காக்கும் நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்த அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
100 ஆக உயர்ந்த ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு – தொடரும் தீவிர நடவடிக்கை! அச்சத்தில் பொதுமக்கள்!!
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸின் ஓமைக்ரான் மாறுபாடு குறித்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநில தலைநகர் லக்னோவில் ஜனவரி 5ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு காலத்தில் காவல்துறை அனுமதியின்றி 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்றால் இந்தியாவில் மூன்றாம் அலை வர கூடும் என்ற எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.