தமிழகத்தில் 1265 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை ஏற்பாடுகள்!
தமிழக அரசு போக்குவரத்து துறை ஆனது ரம்ஜான் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
விசேஷ தினங்கள், பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை தினங்களில் மக்கள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து துறை ஆனது கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வருகிற 11-ம் தேதி தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டும், மேலும் 13 மற்றும் 14ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகத்தின் தலைநகர் ஆன சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு அதிக நபர்கள் போக்குவரத்தை மேற்கொள்வார்கள்.
மீண்டும் மீண்டும் அதிரடியாக உயரும் தங்கம் விலை – இன்று ஒரு சவரன் மேலும் ரூ.245 உயர்வு!
இதன் காரணமாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுமுறை தினங்களை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு 315 பேருந்துகளும், 12ஆம் தேதி 290 பேருந்துகளும், 13ம் தேதி அன்று 340 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதே போல் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. எனவே இந்த விடுமுறை தினங்களில் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் மக்கள் எந்த வித சிரமமும் இன்றி பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.