தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பெண் ஆட்சித் தலைவர்கள் – வரலாற்று சிறப்பு!
தமிழகத்தில் வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் அதிக பெண் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் முழு விவரம் வெளியாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள்:
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மாநில அரசு தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி புதிய தமிழக அரசு தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் முந்தைய காலத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர்கள் பெரும்பாலும் தற்போது மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய மாநில அரசு தற்போது வரை 93 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றியுள்ளது.
தவறான வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினால் எளிதில் திரும்ப பெறலாம் – மக்கள் கவனத்திற்கு!!
அதில் 23 ஐ ஏ எஸ் அதிகாரிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் தமிழகத்தில் வரலாற்றில் முதன்முறையாக அதிக அளவிலான பெண் மாவட்ட ஆட்சியர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் தற்போது 11 பெண் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளனர். மேலும் அவர்கள் அனைவரும் இளம் வயது என்றும் பல்வேறு துறைகளில் தங்களது திறமையை வெளிக்காட்டி உள்ளதால் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தில் வருகிற நாட்களில் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவும் பெண்களுக்கு அதிக முக்கிய பொறுப்புகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கி வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது. இதை அடுத்து தமிழகத்தில் உள்ள 11 பெண் மாவட்ட ஆட்சியர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
11 பெண் மாவட்ட ஆட்சியர்கள்:
- அரியலூர் – ரமண சரஸ்வதி
- சென்னை – விஜயராணி
- நாமக்கல் – ஸ்ரேயா பி சிங்
- தருமபுரி – திவ்யதர்ஷினி
- தென்காசி – சந்திரலேகா
- நீலகிரி – இன்னொசென்ட் திவ்யா
- புதுக்கோட்டை – கவிதா ராமு
- பெரம்பலூர் – வெங்கட பிரியா
- காஞ்சிபுரம் – ஆர்த்தி
- மயிலாடுதுறை – லலிதா
- திருவாரூர் – காயத்ரி கிருஷ்ணன்