தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு – கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி மதிப்பெண் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் உயர் கல்விக்கு முக்கியம் என்பதால் மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல்கள் நீடித்து வருகிறது.
மதிப்பெண் குறித்து ஆலோசனை
கடந்த ஆண்டு இந்தியாவில் பரவிய கொரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி துவங்கி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதில் நாடு முழுவதும் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு அறிவித்தது. தமிழகத்தில் தற்போது மீண்டுமாக கொரோனா தொற்று பரவி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த சூழ்நிலையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்த போது, கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த ஆண்டும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
கல்வி நிறுவன கட்டடங்களுக்கான வரன்முறை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!
அதன்படி மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதிலும் சிக்கல்கள் இருந்து வருகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் என்பதால் மதிப்பெண்கள் வழங்குவதில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. அதன் படி பத்தாம் வகுப்பு மாணவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு, இந்த ஆண்டிற்கான மதிப்பெண்களை வழங்கலாம் எனவும் பரிசீலனை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.