தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை – நாளை பட்ஜெட்டில் அறிவிப்பு?
தமிழகத்தில் 2022 – 23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை மார்ச் 18 நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து ஆலோசிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாதம் ரூ.1000 உரிமைத்தொகை:
ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில் அந்தந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அரசால் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில் தமிழகத்தில் 2022 – 23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை மார்ச் 18 நாளை கூடுகிறது. கொரோனா காரணமாக வருவாய் பற்றாக்குறை கணிசமாக அதிகரித்தது. இதனால் இந்த நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை குறைப்பு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள், நிதி பற்றாக்குறையை குறைப்பதற்கான திட்டங்கள் ஆகியவை இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை – தேர்வு கிடையாது
ஒரே நாடு, ஒரே பதிவு முறை அமல்படுத்தப்படும் பட்சத்தில் பத்திரப்பதிவு வருவாய் குறைய வாய்ப்புள்ளது. இதனால் இதனை சரிக்கட்டி வரி வருவாயை அதிகரிக்கும் பொருட்டு புதிய திட்டங்களை திரட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தலின்போது மகளிருக்கு மாதா மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் ஆகியும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மு க ஸ்டாலினிடம் கேட்டபோது விரைவில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் அமலுக்கு வரும் என கூறினார். இதனால் மகளிருக்கு மாதா மாதம் 1000 வழங்கும் திட்டம் குறித்தும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்தோசிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்