தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
உதவித்தொகை
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் சில நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. அந்த வகையில் சுமார் 10 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் மீண்டுமாக ஆட்சியை கைப்பற்றிய முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்காக பல நலத்திட்ட உதவிகளை அறிவித்ததோடு நில்லாமல், அவற்றை நிறைவேற்றி வருகிறது.
வங்கி கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – சைபர் கிரைம் எச்சரிக்கை!
அதன் படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, 14 மளிகை பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு, பால் விலை குறைப்பு, அரசு பேருந்துகளில் பெண்களுக்கான கட்டணம் இலவசம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் எப்போது துவங்கும் என மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, ‘தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக முதல்வர் முக ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மக்களின் நலன் கருதி கொரோனா பேரிடர் காலத்திற்கு உதவியாக, 4,000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டமும் விரைவில் நிறைவேற்றப்படும். அதற்கான அரசாணையும் சீக்கிரமாக வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.