தமிழகத்தில் கூடுதலாக 100 விரைவு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகம்!
தமிழகத்தில் பேருந்து பயணிகள் வருகை அதிகரிப்பால் கூடுதலாக மாநிலம் முழுவதும் 100 விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த 2 மாதங்களாக பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது அரசின் சீரிய முயற்சியால் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று மிக குறைந்துள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாம் வகையில் உள்ள 23 மாவட்டங்களுக்கும் பொது பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – மாநில அரசு ஒப்புதல்!
கடந்த ஜூன் 28 முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் அரசின் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் மக்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களும், பணி நிறுவனங்களும் செல்ல தொடங்கி விட்டனர். இதனால் பயணிகளின் வருகை அதிகம் காணப்படுகிறது.
பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போது தொடக்கத்தில் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து எண்ணிக்கை தற்போது போதியதாக இல்லை. சில இடங்களில் கூட்ட நெரிசல்கள் காணப்படுவதாகவும் பேருந்து ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். 50% பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவதால் இடம் இருந்தும் பயணிகள் பயணம் செய்ய இயலாத நிலை உள்ளது. அதனால் கூடுதலாக தமிழகம் முழுவதும் 100 விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பேருந்து பயணிகள் வருகை அதிகரிப்பால் கூடுதலாக மாநிலம் முழுவதும் 100 விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த 2 மாதங்களாக பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது அரசின் சீரிய முயற்சியால் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று மிக குறைந்துள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாம் வகையில் உள்ள 23 மாவட்டங்களுக்கும் பொது பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
கடந்த ஜூன் 28 முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் அரசின் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத பயணிகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் மக்களின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களும், பணி நிறுவனங்களும் செல்ல தொடங்கி விட்டனர். இதனால் பயணிகளின் வருகை அதிகம் காணப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போது தொடக்கத்தில் விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 300 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து எண்ணிக்கை தற்போது போதியதாக இல்லை. சில இடங்களில் கூட்ட நெரிசல்கள் காணப்படுவதாகவும் பேருந்து ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். 50% பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவதால் இடம் இருந்தும் பயணிகள் பயணம் செய்ய இயலாத நிலை உள்ளது. அதனால் கூடுதலாக தமிழகம் முழுவதும் 100 விரைவு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.