தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.300 ஆக உயர்வு? அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 300 ஆக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
ஊதிய உயர்வு :
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை சட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலை அளிக்கப்படுகிறது. கடந்த மாதம் அமைச்சர் பெரியகருப்பன் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி திட்டத்தில் மேற்கொள்ள பட்ட பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ளவைகள் பற்றியும் அலுவலர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
e-RUPI என்றால் என்ன? – முழு விவரங்கள் இதோ!
இந்த நிலையில் இந்த 100 நாள் வேலை திட்டத்தின் பழங்குடியினர்களுக்கு என்று தனி கணக்குகள் பராமரிக்கப்பட்டு செலவினங்கள் தொகுக்கப்படும் 100 நாள் வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை ஏதும் மத்திய அரசிடம் இல்லை என என மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மாநகராட்சிகளுக்கு அருகே உள்ள ஒரு சில ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் இது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணி புரிபவர்களுக்கு திமுக தலைமையிலான அரசு ஊதியத்தை 250திலிருந்து 275 ஆக உயர்த்தியது. ஊதியம் 300 ஆக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.