10ம் வகுப்பு பொதுத்தேர்வு : புத்தகத்தை புரட்டாதவர்களுக்கு ஆசிரியர்களின் முக்கிய அறிவுரை !
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு நிலவி வருவதால் அணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வானது தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதால், இதுவரை புத்தகத்தை புரட்டாத மாணவர்களுக்கு அரசு சார்பில் பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டுதல்கள்
குறிப்பாக கடந்த 70 நாட்களாக வீட்டிலேயே இருக்கும் மாணவர்கள் பாடப்புத்தகங்களை புரட்டிப் பார்க்க நேரம் ஒதுக்கவில்லை. சில மாணவர்கள் சொற்ப நேரமே வீட்டில் இருந்து படிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு படிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தொலைபேசி மூலம் ஆசிரியர்களை எந்த நேரமும் தொடர்புகொண்டு தெளிவு பெறலாம்.
கல்வி தொலைக்காட்சியிலும் கவனித்து படிக்கவேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்த ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். எனவே ஆசிரியர்களின் சேவைகளை தொலைபேசி மூலம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் 9266617888 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்து தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |