மத்திய அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடனை பெறுவது எப்படி? சுயதொழில் தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு!
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறும் முறையை பற்றி விரிவாக பார்க்கலாம்.
முத்ரா திட்டம்:
சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு போதுமான பணம் கிடைப்பதில்லை. இதனால் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் தொகைகளை வழங்கி வருகிறது. இந்த கடன் தொகையை பெற எந்தவித ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட தேவையில்லை. இத்திட்டமானது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்று அழைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் தள்ளுபடி: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வீட்டின் உரிமை அல்லது வாடகை ஆவணங்கள், வேலை தொடர்பான தகவல்கள், ஆதார் அட்டை, பான் எண் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் இணைவர்களை 3 வகைகளாக பிரிக்கலாம். அதாவது சிஷோ, கிஷோர் பிரிவு, தருண் பிரிவு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையானது முறையே ரூ.50,000, ரூ.50,000 முதல் ரூ. 5 லட்சம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கொடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் முறையான வட்டி விகிதம் பின்பற்றுவதில்லை.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் இயங்குமா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
இதன் வட்டி விகிதமானது ஒவ்வொரு வங்கிகளிலும் மாறுபட்டு இருக்கும். அத்துடன் இத்திட்டம் மூலம் பெறப்படும் கடன் தொகைக்கு பிணையாக எந்த ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பத்தை வங்கியில் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். அதையடுத்து சொந்தமாக தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.